அதிர்ச்சி! புதுக்கோட்டையில் இளம் பெண் தற்கொலை!

 


புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் கம்பர் நகரில் வசிப்பவர் பிரபாகரன். இவருக்கு வயது 44.பிரபாகரன் ஆலங்குடி தாலுகா கல்லாலங்குடி சுந்தரமூர்த்தியின் மகள் எழில் மணியை 2015ல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு , ஜெயாநந்தன் (3), முரளிதரன் (2) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பிரபாகரன் வெளியில் சென்று விட்டு இரவு வீடு திரும்பியபோது எழில்மணி தூக்கில் பிணமாக தொங்கியது அதிர்ச்சியை அளித்தது.
இதுகுறித்து உடனடியாக ஆவுடையார்கோவில் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அவர்கள் எழில்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எழில்மணியின் தாய் இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எழில்மணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது கணவர் பிரபாகரனிடம் குடும்ப பிரச்சனைகள் குறித்தும், கருத்து வேறுபாடு குறித்தும் பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.