மணி மண்டபத்தில் கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா!

 

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 90வது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில் ராமேஸ்வரத்தில் பேய்க்கரும்பில் அப்துல்கலாம் சமாதியில் அவரது குடும்பத்தினர் கூடி தொழுகை நடத்தினர்.


அவர்களுடன் தொழுகையில் நடிகர் தாமு மற்றும் ஜமாத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதன் பின்னர் அவரது சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்தவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அப்துல் கலாம் பேரன்கள் சேக்சலீம் சேக் தாவூத், அண்ணன் மகள் நசீமாபேகம் மற்றும் குடும்பத்தினர், கலந்து கொண்டனர். அவரது கருத்துக்களை வாழ்க்கை நெறியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.