போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய மாணவர் ’திடீர்’ மரணம்..!!

 

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் வாகனச் சோதனையின் போது பைக்கை நிறுத்தாமல் சென்றுள்ளார். அவரை தேடி கண்டுப்பிடித்த காவல்துறை கீழ்த்தூவல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதை தொடர்ந்து வீடு திரும்பிய மணிகண்டன் திடீரென உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மணிகண்டன் போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிகண்டனின் உடல் உடற்கூராய்வு செய்யப்படது. ஆனால் அவருடைய உறவினர்கள் யாரும் உடலை வாங்கவில்லை. ரூ. 1 கோடி இழப்பீடு கொடுத்தால் மட்டுமே வாங்குவோம் என்று குஊறிவிட்டனர். தற்போது மணிகணிடனின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.