வீட்டின் தனித் தனி அறைகளில் தூக்கில் தொங்கிய தந்தை, தாய், மகன்..!!

 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் தொல்லையால் குடும்பத்தினர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோழிங்கர் காவேரி பாக்கம் சுப்பண்ண முதலி தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருடைய உடன்பிறந்த இளைய சகோதரர் சிவக்குமார், ராமலிங்கத்தை பார்ப்பதற்காக அவருடைய வீட்டுக்கு நேற்று மாலை சென்றுள்ளார். வீட்டுக்குள் சென்றதும் ராமலிங்கம், அவருடைய மனைவி அனுராதா, அவர்களுடைய மகன் பரத் (28) ஆகியோர் வெவ்வேறு அறைகளில் சடலமாக தூக்கில் தொங்கிய படி இருந்துள்ளனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவக்குமார், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்குவ் அந்த காவேரி பாக்கம் காவல்துறையினர் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக வாலாஜா அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிக கடன் தொல்லையால் ராமலிங்கம் குடும்பத்தினர் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது. கந்து வட்டி கும்பலால் குடும்பத்தினர் மிரட்டப்பட்டார்களா என்று விசாரித்து வரும் காவல்துறையினர், இறந்துபோன ராமலிங்கம் மற்றும் பரத்தின் செல்போன்களை ஆய்வு செய்து வருகின்றனர்.