ரூ.18,00,000/- நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை!

 


ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் நாகாலம்மன் நகர் திருத்தணி தெருவில் வசித்து வருபவர் லவக்குமார். இவருக்கு வயது 27. இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவியை அழைத்து வருவதற்காக ஆந்திராவிற்கு சென்றிருந்தார்.

திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது சுமார் 40 பவுன் தங்க நகை, 8 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.
இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும்வெள்ளி பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.18 லட்சம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.