பேருந்து மோதியதில் இளம் பெண் பலி! 5 பேர் படுகாயம்!

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அருங்குன்றம் கிராமத்தில் கீழண்டை தெருவில் வசிப்பவர் 32 வயதான தணிகாசலம். இவருடன் இவருடைய உறவினர்கள் மணிகண்டன் , மாணிக்கம்மாள், யோகலட்சுமி , சரஸ்வதி, தருண் அனைவரும் 2 மோட்டார் சைக்கிள்களில் காஞ்சீபுரம் சென்றனர். மோட்டார் சைக்கிளை தணிகாசலம் மற்றும் மணிகண்டன் ஓட்டிக்கொண்டு சென்றனர்.

சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த ஒரு தனியார் நிறுவன பஸ், 2 மோட்டார் சைக்கிள்கள் மீதும் பயங்கரமாக மோதியதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த கொடூரமான விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணிக்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.


இது குறித்து தகவல் அறிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை தணிகாசலம், யோகலட்சுமி, மணிகண்டன், சரஸ்வதி, தருண் ஆகியோரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவிக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.