கார் விபத்தில் சிக்கிய வானதி சீனிவாசன் மகன் !

 


தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் கமலை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வானதி சீனிவாசன் . இவர் பாஜக வேட்பாளராக களம் இறங்கி வெற்றி கண்டவர். உலக நாயகனை எதிர்த்து போட்டியிடும் போதே இவரை குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்கள் எழுந்தன. அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கி களம் கண்டு வெற்றி கொடியை நாட்டியவர் வானதி சீனிவாசன்.


வானதி சீனிவாசனுக்குக்கு ஆதர்ஸ், கைலாஸ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஆதர்ஷ், கோயமுத்தூர் பிஎஸ்ஜி கல்லூரியில் மாணவர் பேரவை தலைவராக சமீபத்தில்தான் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.


இன்று இவருடைய மகன் ஆதர்ஷ் சென்ற கார் சேலம் அருகே கோர விபத்தில் சிக்கியது. சேலம் மாவட்டம் பட்டர்பிளை மேம்பாலத்தில் ஆதர்ஷ் சென்ற கார் தலைகுப்புற கவிழ்ந்தது. ஆனால் வானதி சீனிவாசன் மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இதுகுறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.