சேலம் பத்திரபதிவு அலுவலகத்தில் விடிய விடிய சோதனை!! முக்கிய ஆவணங்கள், லட்சக்கணக்கில் பணம் சிக்கியது!!

 

சேலம் பத்திரப்பதிவுத்துறை சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடைப்பெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத பணம் ரூபாய் 5 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

சேலம் சூரமங்கலத்தில் இருக்கும் பத்திரப்பதிவுத்துறை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தலை விரித்தாடுவதாக, சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜூவுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவல்துறையினர், கடந்த திங்கட்கிழமையன்று மாலை திடீரென சூரமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

திங்கட்கிழமை மாலை தொடங்கிய இந்த திடீர் சோதனை, நள்ளிரவு முழுவதுமாக தொடர்ந்து நடைப்பெற்று அடுத்த நாள் அதிகாலை 6 மணிக்கு முடிவுற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் பணமும், அலுவலக ஊழியர்களிடம் இருந்து முக்கியமான ஆவணங்களையும் கைப்பற்றினர். சூரமங்கலம் சார் பதிவாளர் இந்துமதியிடம் தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.