செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும்!

 


தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .இதனையடுத்து பள்ளிகள் கல்லூரிகள் செப்டம்பர் முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் குறித்து சென்னை பல்கலை கழகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் படி செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என அறிவித்துள்ளது.கொரொனோ காரணமாக கடந்தாண்டு மற்றும் இந்த ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.
தமிழகத்தில் கொரோனோ தாக்கம் குறைந்து வரும் நிலையில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வினை நேரடியாக நடத்த சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.


அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்புப் பெற்ற அனைத்துக் கல்லூரிகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நேரடியாக தேர்வுகளை நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.