ஹெல்மெட் அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக ஓட்டுநருக்கு அபராதம்..!!

 

மானாமதுரையைச் சேர்ந்த முருகன் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவருடைய செல்போனுக்கு கடந்த 17-ம் தேதி போக்குவரத்து காவல்துறையிடம் இருந்து இ-சலான் ஒன்று வந்துள்ளது.

அதில் ஹெல்மெட் அணியாமல் ஆட்டோ ஓட்டியதற்காக அவருக்கு ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் போக்குவரத்து போலீசார் முறையாக பணிகளை செய்வதில். ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டு சோதனையிடாமல் அவர்களாகவே அபராதம் விதித்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட நடவடிக்கையால் தான் எனக்கு தலைக்கவசம் அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக கூறி, என்னுடைய ஆட்டோ வாகனப் பதிவு எண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி முருகன் கோரிகை விடுத்துள்ளார்.