டிபன் பாக்ஸில் வெடித்துச் சிதறிய வெடிகுண்டு! மாணவர்கள் படுகாயம்!!

 

டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்து சிதறியதில், அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

சிவகங்கை, கீழக்குளம் கிராமத்தில் உள்ள பாழடைந்த பள்ளி வளாகம் ஒன்றில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் கீழே கிடந்த டிபன் பாக்ஸ் ஒன்றைக் கண்டெடுத்து திறக்க முற்பட்டனர். எவ்வளவு முயன்றும் டிபன் பாக்ஸைத் திறக்க முடியாததால், அங்கிருந்த சுவற்றில் டிபன் பாக்ஸை வீசி எறிந்துள்ளனர்.

அப்போது பயங்கர சப்தத்துடன் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்து சிதறியது. அருகில் இருந்த மூன்று மாணவர்களுமே இதில் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.