அதிர்ச்சி! தடுப்பூசி போட வரிசையில் நின்ற பெண் உயிரிழப்பு!

 


தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள காரனேசன் மருத்துவமனையில் வரிசையில் நின்றுகொண்டிருந்த வள்ளிக்கண்ணு வரிசையில் நின்று கொண்டிருந்தார்

இவருக்கு வயது 40. இவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இடையில் தடுப்பூசி குறித்த அச்சம் மக்களிடையே இருந்து வந்தது. தற்போது அந்த அச்சம் நீங்கப்பெற்று விழிப்புணர்வு காரணமாக மீண்டும் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வமாக வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

உடனடியாக பணியில் இருந்த மருத்துவர்கள், அவரை பரிசோதித்த போது அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதற்கிணங்க வள்ளிக்கண்ணுவின் உடல் அப்படியே ஒப்படைக்கப் பட்டுள்ளது.