ரவுடியை என்கவுண்ட்டரில் போட்டு தள்ளிய போலீஸ்! பரபர நிமிடங்கள்!

 

தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரவுடிகளை ஒழித்து கட்ட ஆணையிடப்பட்டது. இதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் சுமார் 2300க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒரே நாளில் ரகசிய தகவல்கள் மூலம் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீதம் இருப்பவர்களையும் பிடிக்க போலீஸ் தரப்பு உத்தரவிட்டுள்ளது. இதற்காக வியூகம் வகுக்கப்பட்டும், தனிப்படை அமைக்கப்பட்டும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.


அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் தேடப்பட்டு வருபவன் பிரபல ரவுடி துரைமுருகன்.
இவன் முள்ளக்காடு அருகே இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. காவல்துறையினர் சுற்றி வளைத்ததும் தப்பி ஓட முயற்சி செய்தான் துரைமுருகன் . இதனையடுத்து போலீஸ் அவனை என்கவுண்டரில் சுட்டுத் தள்ளியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், ரவுடிகளிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.