மெட்ரோ ரயில் சேவையில் நேர மாற்றம் !!

 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் மெட்ரோ ரயில்கள் 50 சதவீத பயணிகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சென்னையில் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் எனவும், ஜூன்25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் இயக்கத்தில் நேர இடைவெளி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

அதன்படி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலான சேவையில் முறையே, 1,2 மணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.மேலும் விம்கோ நகர்-விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் 1 மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். சென்ட்ரல்-விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை தடத்தில் 2 மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.