`மளமள’ பற்றி எரியத் தொடங்கிய தீ! அலறித் துடித்த பயணிகள்!

 


தமிழகத்தில் மட்டுமல்ல ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் சென்னையில் அமைந்துள்ள கோயம்பேடு பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று காலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தில் திடீரென புகை கிளம்பியது. ஓட்டுனர் உடனே பயணிகளை பேருந்தில் இருந்து கீழே இறங்க சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் பேருந்தில் மளமளவென தீ பற்றி எரியத் தொடங்கியது. பயணிகளை உடனடியாக பேருந்தில் இருந்து இறங்க சொன்னதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.


உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அரசு பேருந்தில் ஏற்பட்ட தீயை முழுவதுமாக அணைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.