அதிர்ச்சி! பிரபல கவிஞர் பிரான்சிஸ் கிருபா உயிரிழப்பு!

 


கவிஞர் ஜெ. பிரான்சிஸ் கிருபா பன்முகத் திறமையாளர். இவர் நவீன தமிழ் கவிதை எழுத்தாளர். இவர் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பு மட்டுமே படித்துள்ள இவரது கவிதைகள் பல்வேறு விருதுகளை வென்று குவித்துள்ளன.


பலராலும் பலமுறை விரும்பி படிக்கப்பட்ட மல்லிகைக் கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் எனும் கவிதை நூல்களை எழுதியவர் பிரான்சிஸ் க்ருபா. இவருடைய கன்னி எனும் புதினம் 2007 ல் ஆனந்த விகடனின் சிறந்த புதினம் விருது பெற்றுள்ளது. மேலும் 2008 ல் நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது என பல விருதுகளை வென்றவர்.


இவர் இன்று உயிரிழந்தது இலக்கிய வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது இறப்புக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதி காரியங்கள் சொந்த ஊரில் நடைபெறும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.