முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு, திருமண மண்டபம் உள்பட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

 

அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரி துறை அமைச்சராக இருந்த கே.சி. வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் அவரது வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதேபோன்று, ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள கே.சி.வீரமணிக்கு வீடு, திருமண மண்டபம், அவருக்கு சொந்தமான 28 இடங்களில் மற்றும் சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீரமணியின் உறவினர்கள், அவருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை நடைபெறுகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின்னர், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.