பெண்களே உஷாரா இருங்க! காவல்துறை அதிரடி அறிவிப்பு!

 


தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பண்டிகை காலமாக இருப்பதால் கூட்டம் கூட்டமாக வெளியில் சுற்றத் தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்து திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

அதில் அடுத்தடுத்து வர இருக்கும் பண்டிகை காலங்களில் வீட்டை விட்டு பொது இடங்களுக்குச் செல்லும் பெண்கள் தனியாக செல்லும் போது விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது.
குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளக்கோவில் பகுதியில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என பலரும் கலந்துள்ளனர்.

இந்த நேரத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புக்கள் அதிகம். இதனால் பெண்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவு காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.