83-வது அமைப்பு தினம்: சென்னை சிஆர்பிஎஃப் கொண்டாட்டம்

 

மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்), தனது 83-வது அமைப்பு தினத்தை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடியது.

ஆவடி சிஆர்பிஎஃப் குழு மையத்தின் காவல்துறை துணை ஆய்வாளர் எம் தினகரன், கமாண்டன்ட் டி வி தாமஸ் மற்றும் உயரதிகாரிகள், தமிழ்நாடு கல்வித் துறையின் மாவட்டக் கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன், இணை இயக்குநர் ஜெயகுமார் ஆகியோர் சிஆர்பிஎஃப் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து சிஆர்பிஎஃப் வளாகத்தில் பிரம்மாண்ட மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றது.

லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் இதற்காக 5400 மரக்கன்றுகளை வழங்கி, இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். எம். தினகரன், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கோவிட்-19 நெறிமுறைகளுக்கு உட்பட்டு அதிகாரிகள் மற்றும் அரசு சாரா உறுப்பினர்களுக்கிடையே பாட்மின்டன் போட்டிகளும் நடைபெறுகின்றன.