ஓடும் ரயிலில் தொங்கிய படி பள்ளி மாணவி சாகசம் !! வைரலாகும் வீடியோ பதிவு!!

 

தமிழகத்தில் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்தும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கும்மிடிப் பூண்டியை அடுத்த கவரை பேட்டையில் ரயில் நின்று பயணிகளை ஏத்தியுள்ளது.

ரயில் நகர ஆரம்பித்த உடன் பள்ளி மாணவி ஒருவருடன் ஒரு மாணவனும் படிக்கட்டில் தொங்கியபடி ரயில் பயணம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குறிப்பிட்ட மாணவி ரயில் படிக்கட்டில் உள்ள கம்பியை பிடித்தபடி நடைமேடையில் ஓடி வந்து பின்னர் துள்ளிக் குதித்து ரயிலில் ஏறினார். சிறிது நேரம் ரயில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே ஒரு காலை நடைமேடையில் உரசிய படி சாகச பயணம் செய்தார். அதே போல் மாணவர் ஒருவரும் சாகச பயணம் செய்தார்.


இந்த காட்சி ரயிலில் பிரயாணம் செய்த மற்ற பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. சிலர் அவர்களை திட்டி ரயில் பெட்டிக்குள் வந்து நின்று பயணம் செய்யும் படி அறிவுறுத்தினர். இதன் பின்னர் அவர்கள் ரயிலுக்குள் பயணம் செய்தனர். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதே நேரம் இது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.