சொகுசு காரில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்! காவல்துறை கைது!

 


தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள சூரப்பூண்டி சந்திப்பில் காவல்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.


சோதனையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்களிடம் ஒரு பையில் மொத்தம் 14 கிலோ கடத்தல் கஞ்சா இருப்பது தெரியவந்தது.இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு இளைஞர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை செங்குன்றத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 24) மற்றும் பிரகாஷ் (26) ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்தது. அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.


இது தவிர ஆந்திராவிலிருந்து சென்னை சென்ற ஒரு சொகுசு காரில் 116 மதுபாட்டில்கள் சிக்கியது. அதே போல மற்றொரு சொகுசு காரில் 216 மதுபாட்டில்கள் சிக்கியது. இது குறித்து சென்னை மாதவரத்தை சேர்ந்த சதிஷ் (30) மற்றும் அடையாறை சதீஷ்குமார் (36) இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.