கணவரை பிரிந்த துக்கம் தாளாமல் தற்கொலை செய்து கொண்ட மனைவி!

 

திருவள்ளூர் மாவட்டத்தில் தேவி மீனாட்சி நகரில் வசித்து வருபவர் செல்வராஜ். இவர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று பெற்று வந்தார். இந்நிலையில் ஜூன் 1ம் தேதி செல்வராஜ் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் மனவேதனை அடைந்த அவரது மனைவி லீலா தன்னுடைய கணவர் இறந்த நாள் முதல் துக்கம் தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆறுதல் கூறியும் கணவரை நினைத்து அழுது புலம்பியபடியே இருந்தார்.
இரவு வீட்டில் இருந்த லீலா கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்தார்.

உடனடியாக வீட்டில் இருந்த உறவினர்கள் ஓடி வந்து தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கிணற்றில் இருந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இல்லாமல் லீலா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவள்ளூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.