மயிலம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முன் களப்பணியாளர்கள் கைகளால் திறந்து வைத்த சிவக்குமார் எம்.எல்.ஏ

 

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மயிலம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற பாமகவைச் சேர்ந்த சிவக்குமார். மயிலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மைலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு எம்.எல்.ஏ. வருகை தந்து மக்கள் குறைகேட்பு நடத்துவது, மக்கள் பணி செய்வது பற்றி ஆலோசிப்பது ஆகியவை நடைபெற வேண்டும்

தற்போது வெற்றிபெற்றுள்ள பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் அலுவலகங்களைப் புதுப்பித்து அதை செயல்பாட்டுக்குக் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், தமது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைப் புதுப்பிக்கச் செய்து, அப்பகுதியில் உள்ள முன் களப்பணியாளர்கள் (துப்புரவு ஊழியர் மருத்துவ செவிலியர் மற்றும் மின்சார பழுதுபார்க்கும் நபர்) மக்களுக்கு சேவை செய்யும் அவர்களை ரிப்பன் வெட்டி திறப்புவிழா நடத்தி சட்ட மன்ற அலுவலகத்தை திறக்க செய்து அவர்கள் கைகளால் குத்துவிளக்கேற்ற செய்த எம்.எல்.ஏ சிவக்குமாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.