அதிர்ச்சி! இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை!

 

விருதுநகர் மாவட்டம் மேலத் தெருவில் வசித்து வருபவர் கண்ணன்.இவர் இட்லி கடை நடத்தி வருகிறார். இவர் உஷாவை 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தையும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கண்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினசரி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

இந்நிலையில் சம்பவ தினத்தில் மாலை கண்ணன் குடித்துவிட்டு வந்த நிலையில் அவரது மனைவி உஷா அவரை கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையே வழக்கம்போல் வாக்குவாதங்களும், பிரச்சினைகளும் ஏற்பட்டது.கோபமாக கண்ணன் வெளியே சென்றவுடன் உஷா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்

. இதுகுறித்து உஷாவின் தாயார் புகார் அளித்துள்ளார். அவரது தாயார் மல்லாங்கிணறை சேர்ந்த சின்ன பூச்சம்மாள். இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.