அந்தரங்க பகுதி எரித்து 32 வயது பெண் கொலை!! 17 வயது சிறுவன் கைது!!

 

டெல்லி துவாராக பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் பிறப்புறுப்பு எரிக்கப்பட்டு சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய உடலை உடற்கூராய்வு செய்த போது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

அதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசாருக்கு, இறந்துபோன பெண்ணின் புகைப்படம் பல்வேறு வாட்ஸ் அப் குருப்களில் பரவியது தெரியவந்தது. அதுதொடர்பாக 2800 பேரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர்.

அதன்மூலம் பெண்ணின் வீட்டருகே வசிக்கும் 17 வயது சிறுவன் தான் இக்கொடூர கொலைச் சம்பவத்தை செய்தது என போலீசார் கண்டறிந்தனர். அதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த சிறுவன், பெண்ணை கட்டிப்போட்டு வன்கொடுமை செய்துள்ளான். அதை தொடர்ந்து அவருடைய பிறப்புறுப்பை எரிக்க முயற்சித்து தடயத்தை அழிக்க முயன்றுள்ளான். அதனால் பெண் இறந்துபோகவே உடலை சாக்குப் பையில் கட்டி சாக்கடையில் வீசியுள்ளான்.

சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து மாருதி வேன், இரும்பு குழாய் ஒன்று, மண்ணெண்ணெய், டேப், எரிந்த துணிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 32 வயது பெண்ணை 17 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.