இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

 

இமாச்சல பிரதேசத்தின் கின்னாரில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய விரும்புகிறேன்” என்று அதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.