சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மாற்றம்

 

கொல்கத்தா உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வந்த சஞ்ஜிப் பானர்ஜியை, சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமைநீதிபதியாக கடந்த ஜனவரி முதல் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தனர்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.