ஊரடங்கு நீட்டிப்பு! மாநில அரசு அதிரடி உத்தரவு!!

 


தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது . தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் கொரோனா கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. பாதிப்பை பொறுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் புதுச்சேரியிலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.இந்நிலையில் தற்போது உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை செயல்படுத்தப்படும்.

நவம்பர் 1 முதல் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி. கோவில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி.
சஷ்டிக்கு சூரசம்ஹாரம் நடத்த அனுமதி ஆகியவைக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.