வேறொரு நபருடன் தொடர்பு..!! காதலிக்கு காதலன் செய்த கொடூரம்..!!

 

டெல்லி நகருக்கு அருகேவுள்ள ஓக்லா என்கிற பகுதியைச் சேர்ந்தவர் சந்த் ஆலம் (40). வேலை பார்க்கும் இடத்தில் உடன் பணியாற்றும் ஜர்னா (37) என்கிற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் தனிமையில் நேரம் செலவிட தொடங்கியதை அடுத்து, ஆலமிடம் ஜர்னா அடிக்கடி பணம் கேட்க துவங்கியுள்ளார். அதனால் ஒவ்வொரு மாதமும் காதலிக்கு ரூ. 6000 கொடுத்து வந்துள்ளார் ஆலம்.

இந்நிலையில் ஜர்னாவுக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பது ஆலமுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜர்னாவை விட்டு அவர் விலகிவிட்டார். பணமும் தரமால் விட்டுவிட்டார். ஆனால் ஜர்னா தொடர்ந்து ஆலமிடம் பணம் கேட்டு வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், கடந்த 21-ம் தேதி ஓக்லா தெக்கண்டு என்கிற இடத்தில் இருக்கும் ரயில் பாதைக்கு ஜர்னாவை அழைத்துச் சென்றுள்ளார். உடலுறுவு கொள்வது போல நடித்து கத்திரிக்கோலால் குத்தி ஜர்னாவை ஆலம் கொலை செய்தார்.

ஜர்னா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த போலீசார், விசாரணை மூலம் ஆலமை செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.