சூரிய கிரகண நேரத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க!!

 


நாளை இந்த ஆண்டின் மிக நீண்ட கடைசி சூரியகிரகணம். இந்த கிரகணத்தால் நன்மைகளை விட கெடுதல்களே நடக்க இருப்பதாக ஜோதிட வல்லுனர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் சூரிய கிரகணத்தை நேரில் பார்க்க முடியாது. இருந்த போதிலும் அதன் தாக்கம் இருக்கும் இதனால் சில விஷயங்களை தவிர்ப்பது நல்லது.


இந்த கிரகண நேரத்தில் சமையல் செய்ய கூடாது. சாப்பிடக்கூடாது. தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பது நன்மை. நகம் கிள்ளக் கூடாது. இறைநாமம் சொல்லிய படி அமர்ந்திருந்தால் எந்த கெடுதலும் அண்டாது. கர்ப்பிணிகள் வெளியே நடமாடக் கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.


எதை செய்யலாம்?


கிரகணம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு விலக்கு உண்டு. கிரகண காலத்தில் கோவில்களில் நடை அடைக்கப்படும். இருந்த போதிலும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் கோவில்களில் நடை அடைக்கப்படாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.