14 வயது மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை..!

 

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரயிஜ் என்கிற மாவட்டத்தை சேர்ந்தவ 40 வயதான நபர் ஒருவர், தன்னுடைய 14 வயது மகளை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவேன் என்று மகளை மிரட்டியதால், சிறுமியும் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் மகள் என்றும் பாராமல் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

ஒருநாள் மகள் அனுபவிக்கும் கொடுமைகளை நேரில் பார்த்த மனைவி போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை தந்தையை கைது செய்தது.

இதுதொடர்பான வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மூன்று மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்ட இவ்வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மகளை வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.