பெற்ற மகளையே வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை!!

 

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரயிஜ் மாவட்டத்தில் வசித்து வருபவர் 40 வயது இளைஞர். இவருக்கு 14 வயதில் மகள் இருக்கிறாள். இவளை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்து 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

யாரிடமாவது கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் பயத்தில் அந்த சிறுமி யாரிடமும் இதுகுறித்து சொல்லாமல் இருந்துள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட அவளின் தந்தை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இந்த பிரச்சனை ஒரு நாள் அவளது தாய்க்கு தெரிய வந்தது.அவர் அதிரடியாக காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அவர் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டார்.

இது குறித்த விசாரணைகள் கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.தற்போது இவ்வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மகளை வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.