undefined

சிறுமியை கற்பழித்துக் கொலை... 61வது நாளில் குற்றவாளிக்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

 

மேற்கு வங்கத்தில் சிறுமியை கற்பழித்துக் கொலை செய்தவருக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பராக்காவை சேர்ந்த சிறுமி ஒருவரை அப்பகுதியை சேர்ந்த தினபந்து ஹல்தர் என்பவர் பூ தருவதாக கூறி கடத்திச் சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக கற்பழித்து கொலை செய்த ஹல்தர், அந்த பிணத்துடனும் உறவு கொண்டார். இந்த கொடூர குற்றத்துக்கு சுபோஜித் என்பவர் உதவியாக இருந்துள்ளார்.

மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், குற்றவாளிகள் இருவரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர். பின்னர் ஜாங்கிப்பூர் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையும் விரைவாக நடந்தது. அதன்படி குற்றவாளிகளுக்கு எதிராக 21-வது நாளிலேயே போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.வேகமாக நடந்த இந்த விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு அளித்தார். 

அதில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தினபந்து ஹல்தர் குற்றவாளி என அறிவித்தார். மேலும் சுபோஜித் உதவியாக இருந்ததாக உறுதி செய்தார். அவர்களுக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறுமியை கற்பழித்துக் கொலை செய்த தினபந்து ஹல்தருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. சுபோஜித்துக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!