இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேருக்கு தொற்று

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அசுர வேகம் எடுத்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், கர்நாடக, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக காணப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,96,33,105 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,542 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 3,79,573 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,83,88,100 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,07,628 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 8,65,432 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 28,00,458 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.