இறந்தும் வாழ்கிறார் ஜெயலலிதா... ரூ.5க்கு வயிறு நிரம்ப சாப்பாடு... ஆந்திராவில் முளைக்கும் ‘அண்ணா கேண்டீன்’!
இந்தியா முழுவதுமே பெரும் பேசுபொருளானது முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம். தற்போது தமிழகத்தில் பல இடங்களில் இது செயல்படாவிட்டாலும் கூட, பக்கத்து மாநிலங்களில் இது வேகமெடுத்திருக்கிறது. ஆந்திராவில் ‘அண்ணா கேண்டீன்’ என்கிற பெயரில் ரூ.5க்கு வயிறு நிரம்ப உணவளிக்கிறார்கள்.
நேற்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, குடிவாடாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அண்ணா கேன்டீனை திறந்து வைத்தார். தமிழகத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தைப் போன்று, முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் பெயரில் "அண்ணா கேண்டீன்" என்ற பெயரில் மலிவு விலை உணவகத் திட்டத்தை தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் தொடங்கியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், இந்த வாரம் முதல் கட்டமாக 100 அண்ணா உணவகங்கள் தொடங்கப்படும். கேன்டீனை திறந்து வைத்துவிட்டு சந்திரபாபுவும் அவரது மனைவி புவனேஸ்வரி அண்ணாவும் கேன்டீனில் காலை உணவை சாப்பிட்டனர். தொடக்க விழாவை வடக்கு ஆந்திராவில் நடத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலில் திட்டமிட்டிருந்தார். ஆனால், எம்எல்சி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், இத்திட்டத்தின் தொடக்க விழா கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடாவுக்கு மாற்றப்பட்டது.
இந்த கேன்டீன்களில் தர சோதனை நடத்தி சுகாதாரம் பேணப்படுவதை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கேண்டீனில் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது. காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு தலா 5 ரூபாய்க்கு கிடைக்கும். 15 ரூபாய்க்கு இந்த கேன்டீன்களில் ஒருவர் மூன்று வேளை உணவு சாப்பிடலாம். கடந்த முறை ஒய்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, தெலுங்கு தேசம் அரசு தொடங்கிய அண்ணா கேன்டீன்களை அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மூடிவிட்டார்.
இதையடுத்து, சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, சந்திரபாபு நாயுடு ஜூன் 12ம் தேதி முதல்வராக பதவியேற்றார். பதவியேற்ற முதல் நாளிலேயே அவர் கையெழுத்திட்ட ஐந்து திட்டங்களில் அண்ணா கேன்டீன் திட்டமும் ஒன்று. தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் மாநிலம் முழுவதும் 203 கேன்டீன்கள் அமைக்கப்பட்டன.
தற்போது ஆளும் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்கள் தொகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அண்ணா உணவகங்களைத் திறந்து வைப்பார்கள். வட ஆந்திராவில் எம்எல்சி தேர்தல் நடைபெற உள்ளதால், அண்ணா கேன்டீன் திறப்பு விழா அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா