போலீசை சிக்க வைத்த இளம்பெண்!! போட்டு தள்ளிய காவல்துறை!!

 

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திர குமார் சிங் (39). இவர் ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரிலுள்ள காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். குடும்பத்தை விட்டு அவர் பிரிந்திருந்ததால், வேலை பார்க்கும் ஊரில் வர்ஷா (32) என்கிற பெண் அறிமுகமானார். நாளடைவில் அவர்கள் நெருக்கமாக தொடங்கினர்.

அவ்வப்போது வர்ஷா பணம் கேட்டு தர்மேந்திர குமாரை தொல்லை செய்து வந்துள்ளார். ஆரம்பத்தில் பணம் கொடுத்து வந்த அவர், தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் பணம் தருவதை நிறுத்திவிட்டார். மேலும் பெண்ணை சந்திப்பதையும் அவருடைய வீட்டுக்கு செல்வதையும் தர்மேந்திர குமார் நிறுத்துகொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் காவலரை ஊருக்கு செல்லவிடாமலும், பிளாக்மெயில் செய்தும் மிரட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த தர்மேந்திர குமார் , வர்ஷாவை ஒரு பகுதிக்கு வரவழைத்து தலையை நசுக்கி கொன்றார். பிறகு அவருடைய உடலை பிளாஸ்டிக் பையில் வைத்து புதருக்குள் வீசிவிட்டு சென்றுவிட்டார்.

வர்ஷாவின் உடலை கைப்பற்றிய காவல்துறை தடயவியல் துறை உதவி மூலம் குற்றவாளி தர்மேந்திர குமார் சிங்கை கைது செய்தனர். தற்போது அவரிடம் ஜார்கண்ட் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.