மருமகளுக்கு பாலியல் துன்புறுத்தல்!! மகனின் அதிரடி நடவடிக்கை!!

 

மத்திய பிரதேசம் மாநிலத்திலுள்ள மியானா பகுதியில் வசித்து வரும் நபர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். பிளஸ் 2 படித்து வரும் அவருடைய 16 வயது மகனுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த 21 வயது பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.

மகன் பள்ளிக்கு சென்றதை அடுத்து மருமகளை ஆயுதங்கள் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பள்ளி சென்று திரும்பிய கணவனிடம் பெண் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் போலீசில் புகார் அளித்தனர்.

அதை தொடர்ந்து மாமனாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, அந்த நபர் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்களை ஆயுதம் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ள விபரம் தெரியவந்தது. இதையடுத்து மாமனார் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.