மக்களே தயாரா இருங்க!! இன்று பிரதமர் மோடி உரை!!

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2014ல் பிரதமராக பொறுப்பு ஏற்றார். அப்போது முதல் தொடர்ச்சியாக மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்த உரை காலை 11 மணிக்கு வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.அந்த வகையில் 83 வது நிகழ்ச்சியாக இன்று மன் கி பாத் காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது.

இதில் தற்போதைய கொரோனா நிலவரம், தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி விழிப்புணர்வு, அதன் அவசியம் குறித்து மோடியின் உரை இருக்கலாம் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.