பிரபல எழுத்தாளர் புத்ததேவ் குஹாவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

 

பிரபல எழுத்தாளர் புத்ததேவ் குஹாவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,

“திரு புத்ததேவ் குஹாவின் எழுத்துக்கள் பல அம்சங்கள் நிறைந்தவையாகவும், சுற்றுச்சூழலை நோக்கிய மிகச்சிறந்த உணர்வு நிலையை வெளிப்படுத்துவதாகவும் இருந்தன. அவரது படைப்புகளை பல தலைமுறையினர், குறிப்பாக இளைஞர்கள் மிகவும் ரசித்தார்கள். அவரது மறைவு இலக்கிய உலகிற்கு மிகப் பெரும் இழப்பு. அன்னாரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று கூறியுள்ளார்.