இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்

 

2021 செப்டம்பர் 16 முதல் 19 வரை நடைபெறவுள்ள இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்

2021 செப்டம்பர் 17 அன்று நடைபெறவுள்ள இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். இமாச்சலப் பிரதேசம் மாநில அந்தஸ்து பெற்ற பொன்விழாவை ஒட்டி இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

2021 செப்டம்பர் 18 அன்று, சிம்லாவில் உள்ள தேசிய தணிக்கை மற்றும் கணக்கியல் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ள 2018 மற்றும் 2019 ஆண்டுகளை சேர்ந்த இந்திய தணிக்கை மற்றும் கணக்கியல் அலுவலர் பயிற்சி நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.