கோர விபத்து... பகீர் வீடியோ... லாரி மீது ஆட்டோ மோதி தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்!
எச்சரிக்கை... : இளகிய மனசு உள்ளவங்க இந்த வீடியோவைப் பார்க்காதீங்க. இன்று காலை, விசாகப்பட்டினத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று படுவேகத்தில் வந்து கொண்டிருந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 8 குழந்தைகள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.அவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாகப்பட்டினம் சங்கம் சரத் தியேட்டர் பகுதியில் உள்ள சாலை சந்திப்பில் இந்த விபத்து நேரிட்டது. இதில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 8 குழந்தைகள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்துப் பார்க்கும்போது, ஆட்டோ டிரைவரின் அலட்சியத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளது” எனத் தெரிவித்தனர்.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!