பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்! மத்திய அமைச்சர்!

 

மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து அவருக்கு மூலவர் ஏழுமலையான் மற்றும் கோவிலில் உள்ள பல்வேறு சன்னதிகளில் சாமி தரிசனம் செய்த பின் அவருக்கு லட்டு, தீர்த்தப் பிரசாதம், சாமி படம் ஆகியவை வழங்கப்பட்டது.

இதனையடுத்து அவர் விடுத்த செய்திக்குறிப்பில் இந்தியாவில் அனைத்து மக்களும் கொரோனா காரணமாக பல மாதங்களாக கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இனிமேல், பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வாழ மத்திய அரசு விரைவில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால் கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை அதனால் தொடர்ந்து நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். திருப்பதியில் சாமி தரிசனம் முடிந்ததும், அவர் ரேணிகுண்டாவிலிருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.