துலாம் ராசியினர் செல்வம் செழிக்க இந்த கணபதியை வணங்க வேண்டும்!

 

இந்து மதத்தில் சிவ ,விஷ்ணு ஆலயங்களில் முழுமுதற் கடவுளாக கொண்டாடப்படுவது பிள்ளையார் தான். அனைவருக்கும் பிடித்த, எந்த வடிவத்திலும், எந்த பொருளிலும் எளிமையாக குடிகொண்டு அருள் பாலிக்கும் விநாயகர் காணும் இடமெல்லாம் நிறைந்திருக்கிறார்.

விநாயகர் சதுர்த்தி நாளில் விதவிதமான வடிவங்களில் செய்து பக்தர்கள் கொண்டாடுகிறார்கல் .வடிவங்களில் விநாயகர் வேறுபட்டாலும், ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்ற, வணங்கத்தக்க பிள்ளையார் இருக்கிறார்.

துலாம் :
துலாம் ராசிக்காரர்கள் ‘ஷிப்ர ப்ரசாத கணபதி’ யை வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம். ஷிப்ர பரசாத கணபதி திருவுருவ படம் கிடைக்காவிட்டாலும், இணையதளங்களில் இருக்கும் இந்த திருவுருவ படத்தை ப்ரிண்ட் செய்து பூஜையறையில் வைத்து வழிபட்டு வரலாம்.