12 வது உலகத் தமிழ் மாநாடு திருச்சியில் நடைபெறும்!! தமிழக அரசு அதிரடி!!

 

உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டுவருகிறது. தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் மிகப்பெரிய களமாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் விளங்கி வருகின்றன. இந்த மாநாட்டை நடத்துவதை தமிழக அரசு தன்னுடைய மிகப்  பெரிய கௌரவமாக கருதுகிறது. இந்த மாநாட்டின் மூலம்  தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கவும், உலகெங்கும் வாழும் தமிழறிஞர்களை ஒன்றிணைக்கும் வகையிலும் இதன் செயல்பாடுகள் அமையும். 


முதல் உலகத் தமிழ்  மாநாடு 1966ல் மலேசியா கோலாலம்பூரில் நடத்தப்பட்டது. 1968ல் சென்னையிலும், 1970ல்  பாரிசிலும் , 1974ல்  இலங்கையிலும், 1981ல் மதுரையிலும், 1987ல் மீண்டும் மலேசியாவிலும், 1989ல்  மொரிஷியசிலும், 1995ல் தஞ்சாவூரிலும் நடத்தப்பட்டது. 2015ல் கோலாலம்பூரிலும், 2019ல்  சிகாகோவிலும் நடத்தப்பட்டன. 2010ல் உலகத் தமிழ் செம்மொழி மாநாடுகோவையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் 12வது உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திற்கு திருச்சி மையப் பகுதி என்பதால் திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.  திருச்சி துவரங்குறிச்சி, முஸ்லிம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த நரம்பியல் டாக்டர் எம்.ஏ.அலீம், உங்கள் தொகுதியில் முதல்வருக்கு  ஏப்ரல் 1ம் தேதி அளித்த மனுவில்  12-வது உலகத் தமிழ்ச் சங்க மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும். அதற்கு அரசு ஒப்புக்கொள்ளுமா? எனக் கேட்டிருந்தார். 


இதுவரை 11 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இதுவரை திருச்சியில் உலகத் தமிழ் மாநாடு எதுவுமே நடத்தப்படவில்லை. எனவே 12ம் உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்தும்படி முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். அந்த மாநாட்டை, 'திராவிட கலாசாரம் மற்றும் அறிவியல் தமிழ்" என்ற தலைப்பில் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.  அரசு கொள்கை முடிவு அந்த மனுவுக்கு தற்போது தமிழ் வளர்ச்சி இயக்குனர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், திருச்சியில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவது அரசின் கொள்கை முடிவு. அவரின் கோரிக்கையின் மூலம் மனு ஏற்கப்பட்டுள்ளது எனவும்,  அடுத்த உலகத் தமிழ் மாநாடு திருச்சியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!