undefined

காலை 13 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! 

 

 

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘மோன்தா’ என பெயரிடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலத்தின் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளது. கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மோன்தா புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் உயரக்கூடியதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை வானிலை மையம் இன்று காலை   மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.

இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கோவை, நாகை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நீலகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புயல் தற்போது தென்கிழக்கு வங்கக் கடலில் வடமேற்கே நகர்ந்து வருவதால், தமிழகத்தின் வட கடலோரப் பகுதிகளில் மழை தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!