லாவோசில் சிக்கி பரிதவித்த 17 இந்தியர்கள்.. மத்திய அரசின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்பு!
Apr 7, 2024, 11:00 IST
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் இந்தியத் தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகவும், அங்கு அவர்கள் பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோதமான வேலைகளில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து அவர்களை பத்திரமாக சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. லாவோஸில் உள்ள இந்திய தூதரகம் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
லாவோஸில் பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோத வேலைகளில் சிக்கிய 17 இந்திய தொழிலாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். லாவோஸில் உள்ள இந்தியத் தூதரகத்தின் வெற்றிகரமான முயற்சிகளுக்குப் பாராட்டுகள். இந்தியத் தொழிலாளர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு ஆதரவளித்த லாவோ அதிகாரிகளுக்கு நன்றி என பதிவிட்டுருந்தார்."
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!