28 பேரை துரத்தி துரத்தி கடித்த நாய்.. பீதியடைந்து தலைதெறிக்க ஓடிய மக்கள்..!!

 

13 ஆண்கள், 15 பெண்கள் என 28 பேரை விரட்டி, விரட்டி நாய் கடித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை ஜி.ஏ சாலையில் உள்ள பகுதியில் பள்ளி முடிவடைந்ததையடுத்து நேற்று வீட்டிற்கு பெற்றோர்கள் குழந்தையை அழைத்து சென்றனர். அப்போது அங்கு பொதுமக்களை பாரத்து நாய் ஒன்று குரைக்க தொடங்கியது. சிறிதி நேரம் கழித்து அந்த நாய் மக்களை திடீரென கடிக்க தொடங்கியது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் நடந்து வந்த மக்கள் திடீரென ஓட தொடங்கினர்.

இருப்பினும் அந்த நாய் 13 ஆண்கள், 15 பெண்கள் என 28 பேரை விரட்டி, விரட்டி கடித்துள்ளது. மேலும் நாய் துரத்தியதால் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் கீழே விழுந்தும் காயம் அடைந்தனர்.  இதனையடுத்து அப்பகுதி மக்கள் கடிக்க வந்த நாயை கல்லால் அடித்தனர். இதில் நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இந்தநிலையில், நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள்  25 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். லேசான காயமடைந்த 3 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வண்ணாரப்பேட்டை பகுதியில் சுற்றித்திரியும் நாயை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.