குல்பி சாப்பிட்ட 50 சிறுவர், சிறுமிகள் உட்பட 85 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

 

விழுப்புரம் மாவட்டத்தில்  முட்டத்தூர் கிராமத்தில் நேற்று கண்ணன் என்பவர் குல்பி ஐஸ் விற்றுக் கொண்டிருந்தார். இதனை அப்பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் உட்பட பலர் குல்பி ஐஸ் சாப்பிட்டனர். இதற்கு பெரும் வரவேற்பு இருந்தது.

குல்பி சாப்பிட்டவர்களுக்கு நள்ளிரவில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 85 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 50க்கும் மேற்பட்டோர்   பள்ளி சிறுவர், சிறுமிகள். இதனையடுத்து நேற்று பள்ளிக்கு அருகில் குல்பி ஐஸ் விற்பனை செய்த  கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!