மேலும் ஒரு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை!! தமிழகத்தில் தொடரும் சோகம்!!

 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் வசித்து வருபவர் வேலுச்சாமி. இவரது மகள் காயத்ரி. இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பு 5-ம் ஆண்டு ஹவுஸ் சர்ஜன் படித்து வருகிறார். இவர் மருத்துவக் கல்லூரியில் பெண்களுக்கான தங்கும் விடுதியில் தனி அறையில் தங்கி உள்ளார். 


இந்நிலையில் மாணவி காயத்ரி இன்று காலை முதலே அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் வகுப்புக்கு சென்று திரும்பிய அவரது நண்பர்கள் காயத்ரி அறையின் கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர்கள், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். 


அங்கு காயத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மாணவர்கள் ஒன்றிணைந்து காயத்ரியை மீட்டு உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.


இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காயத்ரி மன அழுத்தத்தில் இருந்ததும், அதற்காக அவர் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மருத்துவ மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மருத்துவக் கல்லூரி மாணவி காயத்ரி தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் எழுதி வைத்திருந்த கடித்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாக காயத்ரி குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடிதத்தை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?