பகீர்!! தேவாலயத்திற்குள்   சிறுமிகளுக்கு  பாதிரியார்  பாலியல்  தொல்லை!!

ராமேஸ்வரத்தில்  கிறிஸ்தவ  தேவாலயத்திற்கு  வழிபட  சென்ற  சிறுமிகளிடம்  பங்குத்தந்தை  பாலியல்  சீண்டலில்  ஈடுபட்ட  சம்பவம்  பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி   உள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தோணித்துறை, மரவெட்டி வலசை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. இவற்றுக்கு ஜான் ராபர்ட் (46) என்பவர் பங்குத்தந்தையாக இருந்து வந்தார். இவருடைய பூர்வீகம் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் என்று கூறப்படுகிறது. கிறிஸ்தவ தேவாலயத்திற்கு குடும்பத்துடன் வழிபாட்டிற்கு வருவது வழக்கம். அதன்படி வழிபாட்டிற்கு வந்த சில சிறுமிகளுக்கு பங்குத்தந்தை ஜான் ராபர்ட் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இரட்டை அர்த்த வசனங்களை பேசிபாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள் உடனடியாக இது குறித்து தங்கள் பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளனர்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த சிறுமிகள் பெற்றோர்கள், உடனடியாக குழந்தைகள் நல அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்இதுதொடர்பாக ஜான் ராபர்ட்டிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் ஜான் ராபர்ட் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஜான் ராபர்ட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்தவ தேவாலயத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக அப்பகுதி சுற்றுவட்டாரங்களில் இருக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களின் பங்குத்தந்தை இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.